செய்திகள்
தொழிலாளி கொலை

காஞ்சிபுரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2020-05-20 07:03 GMT   |   Update On 2020-05-20 07:03 GMT
காஞ்சிபுரத்தில் கூலித் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

சின்ன காஞ்சிபுரம் நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சீனிவாசன் என்கிற ரஜினி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது தங்கை குடும்பத்தினருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு ரோடு ஓரத்தில் உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் சீனிவாசன் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அவரை எதற்காக அடித்துக்கொலை செய்தார்கள், குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News