செய்திகள்
புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் முன்னெச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கையாக 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு உம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதனால், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கையாக 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயலானது வருகிற 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை (செவ்வாய் கிழமை) 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசும் காற்றுடன் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புயலினால் தமிழகம், புதுவையில் பாதிப்பு இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு உம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதனால், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கையாக 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயலானது வருகிற 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை (செவ்வாய் கிழமை) 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசும் காற்றுடன் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புயலினால் தமிழகம், புதுவையில் பாதிப்பு இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.