செய்திகள்
கொரோனா வைரஸ்

கேரளாவுக்கு சென்ற புதுவை வாலிபருக்கு கொரோனா

Published On 2020-05-18 14:50 IST   |   Update On 2020-05-18 14:50:00 IST
கேரளாவுக்கு சென்ற புதுவை வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவருடன் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் தற்போது 6 பேரும், காரைக்கால் மருத்துவமனையில் 2 பேரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், காரைக்கால் சுரக்குடியை சேர்ந்த ஒருவருக்கு 2 நாள் முன்பு பரிசோதனை செய்ததில் கொரொனா தொற்று இல்லை என வந்துள்ளது. நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முடிவு இன்று வெளிவரும். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தால் நாளை அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்.

புதுவையில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த 9 பேரும், மாணவர்கள் 4 பேரும் இன்று திரும்பி வருகின்றனர். அவர்கள் புதுவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதுவை கென்னடி நகரை சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் கடந்த 14 -ந் தேதி கேரள மாநிலம் கன்னூர் சென்றுள்ளார். அங்கு விபத்தில் சிக்கிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News