செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையில் எலி மருந்து தின்று பைனான்சியர் தற்கொலை

Published On 2020-05-17 22:22 IST   |   Update On 2020-05-17 22:22:00 IST
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பைனான்சியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை குரும்பாம்பேட் 6-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது43). இவருக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்னத்துரை பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். 

இந்த தொழிலில் அவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் சின்னத்துரை மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சின்னத்துரை சீர்காழியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறி சென்றார். 

அங்கு விரக்தியில் இருந்து வந்த சின்னத்துரை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டென்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய சின்னத்துரைக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News