செய்திகள்
தற்கொலை முயற்சி

மாமியாருடனான தகராறில் தற்கொலைக்கு முயன்ற பெண்

Published On 2020-05-16 14:42 IST   |   Update On 2020-05-16 14:42:00 IST
புதுவையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் வளையலை நொறுக்கி தின்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த விஜயா (வயது22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயா தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இதற்கிடையே விஜயாவுக்கும் அவரது மாமியார் வசந்தாவுக்கும் சிறுசிறு பிரச்சனைகளில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஜயா தங்கியிருந்த அறை கதவை அவரது மாமியார் வசந்தா வேகமாக சாத்தினார். அதை பார்த்த விஜயா மாமியாரிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த விஜயா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை கழற்றி உடைத்து தின்று தற்கொலைக்கு முயன்றார். மேலும் வீட்டில் இருந்த மாத்திரைகளையும் அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் விஜயா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்ததும் அவரது கணவர் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்து விஜயாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News