செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது
கடலூர்:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை. நேற்றுமாலை வெளியான சுகாதாரதுறை அறிவிப்பில் கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானது. விருத்தாசலத்தை சேர்ந்த தந்தை -மகனுக்கும், மற்றொருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை. நேற்றுமாலை வெளியான சுகாதாரதுறை அறிவிப்பில் கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானது. விருத்தாசலத்தை சேர்ந்த தந்தை -மகனுக்கும், மற்றொருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.