செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா

Published On 2020-05-12 17:26 IST   |   Update On 2020-05-12 17:26:00 IST
கடலூரில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பயிற்சி பள்ளி உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் இங்கு கடந்த 3-ந் தேதி முதல் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடந்து வருகிறது. சுமார் 134 பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

கடந்த 10-ந் தேதி 134 பெண் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்பட 160 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை நடத்தினர். அந்த பரிசோதனை முடிவு இன்று காலை வந்தது.

அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர், 2 ஏட்டுகள், 10 பெண் பயிற்சி காவலர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்ட அளவில் நேற்று வரை 395 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 409 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள கொரோனா தடுப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் போலீஸ் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இதையொட்டி அந்த பகுதி முழுவதும் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News