செய்திகள்
காரைக்காலில் முதன் முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று
காரைக்காலில் முதன் முதலில் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர் வசித்து வந்த பகுதி மற்றும் அதனை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லாத வண்ணம் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய கிராமங்களில் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர் வசித்து வந்த பகுதி மற்றும் அதனை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லாத வண்ணம் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய கிராமங்களில் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.