செய்திகள்
கோப்பு படம்

கடலூரில் ஒரே நாளில் 2 பேர் அடித்து கொலை

Published On 2020-05-09 12:48 IST   |   Update On 2020-05-09 12:48:00 IST
கடலூரில் ஒரே நாளில் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் கடலூர் மாவட்ட பகுதிக்கு சென்று மதுகுடிக்க தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கினர். திருத்துறையூர் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே சவுக்குதோப்பில் 4 பேரும் மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பழனிவேலை தாக்கி கொன்றனர்.

கடலூர் அருகே உள்ள வி.காட்டுப்பாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த சிவக்குமார் (35) நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தந்தை ராமலிங்கத்துக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவக்குமார் ராமலிங்கத்தை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்.

Similar News