செய்திகள்
தமிழகத்தை போல் புதுவையில் மதுபான கடைகள் திறக்கப்படுமா?
புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர தீவிரம் காட்டுவர் என்பதால் இதனை தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மறுநாள் 23-ந் தேதி 144 தடை உத்தரவை புதுவை அரசு பிறப்பித்தது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அன்று மூடப்பட்ட மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. மார்ச் 31-ந் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு நீடித்ததால் இந்த கடைகள் திறக்கப்படவில்லை.
அதேநேரத்தில் 3-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததால் நேற்றைய தினம் புதுவையில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. ஊரடங்கு தளர்வினால் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வருகிற 7-ந் தேதி மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையை பொறுத்தவரை கலால்துறை மூலம் தான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. 43 நாட்களாக மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் நிதி வழங்காததால் அரசின் செலவினங்களை சமாளிப்பதற்காக மதுபான கடைகளை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் பட்சத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர தீவிரம் காட்டுவர். இதனை தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே மதுபான வியாபாரிகள் மீது ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்தததாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இது மதுபான வியாபாரிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை கட்டாயத்தின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கலால்துறை மதுபானக்கடை உரிமையாளர்களை நசுக்கும் விதத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அரசிடம் முறையிட்டு கலால்துறை வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் மதுபான கடைகளின் மீதான வழக்குகளை ரத்து செய்ய புதுவை அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வருகிற 7-ந் தேதி மொத்தம் மற்றும் சில்லரை வியாபார கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதிக்கும் என தெரிகிறது. அமர்ந்து சாப்பிடும் மதுக்கடைகள், ரெஸ்டாரெண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மறுநாள் 23-ந் தேதி 144 தடை உத்தரவை புதுவை அரசு பிறப்பித்தது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அன்று மூடப்பட்ட மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. மார்ச் 31-ந் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு நீடித்ததால் இந்த கடைகள் திறக்கப்படவில்லை.
அதேநேரத்தில் 3-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததால் நேற்றைய தினம் புதுவையில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. ஊரடங்கு தளர்வினால் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வருகிற 7-ந் தேதி மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையை பொறுத்தவரை கலால்துறை மூலம் தான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. 43 நாட்களாக மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் நிதி வழங்காததால் அரசின் செலவினங்களை சமாளிப்பதற்காக மதுபான கடைகளை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் பட்சத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர தீவிரம் காட்டுவர். இதனை தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே மதுபான வியாபாரிகள் மீது ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்தததாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இது மதுபான வியாபாரிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை கட்டாயத்தின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கலால்துறை மதுபானக்கடை உரிமையாளர்களை நசுக்கும் விதத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அரசிடம் முறையிட்டு கலால்துறை வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் மதுபான கடைகளின் மீதான வழக்குகளை ரத்து செய்ய புதுவை அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வருகிற 7-ந் தேதி மொத்தம் மற்றும் சில்லரை வியாபார கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதிக்கும் என தெரிகிறது. அமர்ந்து சாப்பிடும் மதுக்கடைகள், ரெஸ்டாரெண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கூறப்படுகிறது.