செய்திகள்
கோரிமேட்டில் ஓட்டல் ஊழியர் மயங்கி விழுந்து மரணம்
கோரிமேட்டில் ஓட்டல் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
சிவகங்கை மாவட்டம் நாகலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். (வயது 41). இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
முத்துராமன் கடந்த 10 ஆண்டுகளாக ஜிப்மர்ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனியார் கேன்டீனில் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.
முத்துராமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று கேன்டீனில் முத்துராமன் சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் நெஞ்சு வலியால் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் நாகலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். (வயது 41). இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
முத்துராமன் கடந்த 10 ஆண்டுகளாக ஜிப்மர்ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனியார் கேன்டீனில் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.
முத்துராமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று கேன்டீனில் முத்துராமன் சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் நெஞ்சு வலியால் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.