செய்திகள்
புதுவை ஜிப்மர்

முன் அனுமதி பெற்ற பின்னரே ஜிப்மரில் நோயாளிகள் அனுமதி - நிர்வாகம் அறிவிப்பு

Published On 2020-05-05 13:37 IST   |   Update On 2020-05-05 13:37:00 IST
மருத்துவ நிபுணர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே ஜிப்மரில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது
புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 44 மருத்துவ பணியாளர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளர். அவர்களின் தொடர்பில் இருந்த நாட்களின் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ர். பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று வரை 25 மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய நிபந்தனைகளின்படி நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை உரிய நேரத்தில் செய்யப்படும். ஜிப்மர் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தொலை பேசி மருத்துவ சேவை தொலை-காணொளி மருத்துவ சேவையாக இன்று முதல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் தொலைபேசி மூலம் உங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்குவார். நீங்கள் ஜிப்மர் வரவேண்டிய தேதி மற்றும் நேரம் உங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியில் குறுந் செய்தியாக அனுப்பப்படும் முன் அனுமதி பெற்ற நோயாளிகள் மட்டும் மருத்துவமனை வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News