செய்திகள்
பலியான குட்டி யானை

முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கி 3 வயது ஆண் குட்டி யானை பலி

Published On 2020-05-04 10:53 GMT   |   Update On 2020-05-04 10:53 GMT
முதுமலை வனப்பகுதியில் புலிதாக்கி குட்டி யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது.
ஊட்டி:

முதுமலை, தெப்பக்காடு வனச்சரகம், இமரல்லா பீட், கஞ்சிகட்டி வேட்டை தடுப்பு முகாம் அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் வன அதிகரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மசினகுடி அரசு கால்நடை டாக்டர் கோசலன் முன்னிலையில் குட்டி யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த ஆண் குட்டி யானை, பிறந்து மூன்று மாதம் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கியதில் காயமடைந்து, அதன் காரணமாக உயிரிழந்துள்ளது,’ என்றனர்.
Tags:    

Similar News