செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு கொரோனா

Published On 2020-05-01 19:38 IST   |   Update On 2020-05-01 19:38:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் புற்றுநோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படாத நிலையில், இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 64 வயதுடைய  பெண் புற்றுநோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜிப்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

Similar News