செய்திகள்
அமைச்சர் ராஜினாமா வதந்தியால் பரபரப்பு
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொகுதி பிரச்சனைக்காக சட்டசபை முன்பு தர்ணா நடத்தினார். முன்னதாக சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். சபாநாயகரிடம் அமைச்சர் கடிதம் தரும் போட்டோவுடன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நெருக்கடியான சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். சபாநாயகரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜினாமா கடிதம் தரவில்லை, தர்ணா போராட்டம் நடத்த உள்ளது குறித்து தகவல் தெரிவித்து கடிதம் அளித்தார் என்றார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொகுதி பிரச்சனைக்காக சட்டசபை முன்பு தர்ணா நடத்தினார். முன்னதாக சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். சபாநாயகரிடம் அமைச்சர் கடிதம் தரும் போட்டோவுடன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நெருக்கடியான சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். சபாநாயகரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜினாமா கடிதம் தரவில்லை, தர்ணா போராட்டம் நடத்த உள்ளது குறித்து தகவல் தெரிவித்து கடிதம் அளித்தார் என்றார்.