செய்திகள்
மளிகை பொருட்கள்

நெல்லிக்குப்பம் போலீசார் அறிவிப்பு- கூடையுடன் வந்தால் பொருட்கள் கிடைக்கும்

Published On 2020-04-29 13:55 IST   |   Update On 2020-04-29 13:55:00 IST
நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும் போது கூடையுடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர். இதனை சரி செய்வதற்காக நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் பொதுமக்கள் கூடை எடுத்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில் கடை சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார்.

அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும் போது குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

Similar News