செய்திகள்
ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் சார்பில் திருநங்கைகளுக்கு உதவி

ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் சார்பில் திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்

Published On 2020-04-28 19:56 IST   |   Update On 2020-04-28 19:56:00 IST
ஊரடங்கு உத்தரவு காரணமாக கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தினக்கூலி ஊழியர்கள், கட்டுமான ஊழியர்கள் போன்றோர் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அதேபோன்று திருநங்கைகளும் சாப்பிட்டுக்கு வழியில்லாத நிலையில் உள்ளனர். இதுபோன்றவர்களுக்கு அரசுடன் தொண்டு நிறுவனங்கள், வசதிப்படைத்தவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ  புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் சார்பில் இயலாதவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று புதுக்கோட்டை பகுதியில் வாழும் இருபத்தைந்து திருநங்கைகள் பயன்பெறும் வகையில் 100 கிலோ அரிசி, 10 கிலோ துவரம் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

Similar News