செய்திகள்
வீடுகள்தோறும் சென்று 2-வது கட்ட கொரோனா பரிசோதனை
புதுச்சேரியில் வீடுகள்தோறும் சென்று 2-வது கட்ட கொரோனா பரிசோதனை நடத்த இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் 4 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல முறையில் உள்ளனர். புதுவையில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள பயனற்ற பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். 10 மில்லி தண்ணீர் இருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை உருவாக்கிவிடும்.
புதுவையில் இதுவரை 1,918 பேருக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கடைத்தெருவில் நடமாடி உள்ளனர். அதேபோல் புதுவை மக்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நாம் இவ்வளவு நாட்கள் எடுத்த முயற்சிகள் ஒரே நாளில் வீணாகிவிடும்.
தொடர்ச்சியாக நாம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்த உள்ளோம். அதன்படி 2-வது கட்ட சோதனையை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் 4 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல முறையில் உள்ளனர். புதுவையில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள பயனற்ற பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். 10 மில்லி தண்ணீர் இருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை உருவாக்கிவிடும்.
புதுவையில் இதுவரை 1,918 பேருக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கடைத்தெருவில் நடமாடி உள்ளனர். அதேபோல் புதுவை மக்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நாம் இவ்வளவு நாட்கள் எடுத்த முயற்சிகள் ஒரே நாளில் வீணாகிவிடும்.
தொடர்ச்சியாக நாம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்த உள்ளோம். அதன்படி 2-வது கட்ட சோதனையை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.