செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு பரவாமல் தடுக்க விழிப்புணர்வு- சுகாதாரத்துறை அறிவுரை

Published On 2020-04-27 10:42 GMT   |   Update On 2020-04-27 10:42 GMT
புதுவை மழை பெய்ததால், மக்கள் வெளியில் வருவது குறைந்திருந்தது. புதிய மழையால் பிரச்சினை உள்ளது. இது டெங்கு சீசன் என்பதால், வீட்டை சுற்றியுள்ள சிறு சிறு பொருட்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது:

புதுவை மழை பெய்ததால், மக்கள் வெளியில் வருவது குறைந்திருந்தது. புதிய மழையால் பிரச்சினை உள்ளது. இது டெங்கு சீசன் என்பதால், வீட்டை சுற்றியுள்ள சிறு சிறு பொருட்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே வீடுவீடாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை பணி துவங்கியுள்ளது. சளி, இருமல் இருந்தால் உடனே கொரோனா என மக்கள் பயப்பட வேண்டாம். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே புதுவையில் கொரோனா வந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வெண்டிலேட்டர், மாஸ்க், உடைகள் தேவையான அளவு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News