செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2020-04-24 19:20 IST   |   Update On 2020-04-24 19:20:00 IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆலங்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட செயல் அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அனைவரையும் ஆலங்குடி நகர பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.
ஆலங்குடி:

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆலங்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட செயல் அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அனைவரையும் ஆலங்குடி நகர பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் வருகைப்பதிவு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வீடுகள் தோறும், தெருப்பகுதிகள், ஆகியவற்றில் கிருமிநாசினி லைசால் கரைசல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பேரூராட்சி பகுதிக்குள் வெளி மாவட்டம் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைசாவடியில் கிருமி நாசினி அடித்தல் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஹேண்ட் சானிடைசர் திரவம் கைகளில் அடிக்கப்பட்டு முக வசம் அவசியம் அணிய வேண்டும் என வலியுறுத்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் வணிக கடைகள், மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தல் உறுதி செய்தல், வெளியே வரும் போது மாஸ்க் அணிவிக்க அறிவுறுத்தல், ஆட்டோவில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல் மற்றும் நடமாடும் காய்கறி கடைகள் ஆய்வு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மிகச்சிறப்பாகும்.

இந்த நடவடிக்கைகளை பாராட்டும் வகையில்ஆலங்குடி வர்த்தக சங்கதலைவரும் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான மோகன், அலுவலர்களை பாராட்டியும், தூய்மை பணியாளர்களை பாராட்டியும், உணவின்றி தவித்த முதியோர்களுக்கு 10 மூட்டை அரிசியும் வழங்கினார்.

Similar News