செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

Published On 2020-04-15 17:52 IST   |   Update On 2020-04-15 17:52:00 IST
நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில், கொரோனா ஒரளவு கட்டுக்குள் உள்ளது. மக்கள், நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இறைச்சி கடைகள் நடப்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால், சமூக இடை வெளி கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனால், இறைச்சி கடைகளை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் ஒரு மணி வரை நடத்தி கொள்ளலாம். தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தன்னார்வலர்களிடம் கூறினால், அவர்கள், பொருட்களை வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்.

மாவட்டத்தில், தனிமை படுத்தப்பட்டவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குறைவு தான். தற்போதைக்கு 220 பேர் தான் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நீலகிரியில் கொரோனா பாதித்த 9 பேர் கோவை இ.எஸ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் இன்னும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டை விட்டு அத்யாவசிய பணிகளுக்கு வெளியே வரும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் போடாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News