செய்திகள்
பெங்களூரில் இருந்து பைக்கில் வந்த நிறைமாத கர்ப்பிணி, மற்றும் குழந்தைகள்.

பெங்களூரில் இருந்து காட்பாடிக்கு பைக்கில் வந்த நிறைமாத கர்ப்பிணி

Published On 2020-04-06 11:58 GMT   |   Update On 2020-04-06 11:58 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக பெங்களூரில் இருந்து பைக்கில் வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு போலீசார் அறிவுரை கூறி காட்பாடிக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர்:

காட்பாடியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள், ஒரு நாய் குட்டியை பைக்கில் அழைத்து கொண்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் பெங்களூரி இருந்து கிளம்பியுள்ளார்.

தமிழக - கர்நாடக எல்லையில் பரிசோதனை செய்து அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று மதியம் 12 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் வந்த இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பயிற்சி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், காட்பாடியை சேர்ந்தவர்கள் என்பதும், பிரசவத்துக்கு டாக்டர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளதாகவும், பெங்களூரில் போதிய வருமானம இல்லாததாலும், போக்குவரத்தும் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு பைக்கில் வந்து விட்டதாக தெரிவித்தனர்.

இவ்வளவு தூரம் நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் அழைத்து வந்துள்ளாய்? நடுவில் ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வது? இனி இதுபோன்ற தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

நீண்ட தூரம் வந்ததால் வீட்டிற்கு சென்றவுடன் டாக்டரிடம் சென்று நிறைமாத கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News