செய்திகள்
இட்லி

வேலூர் மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் இரவிலும் திறப்பு

Published On 2020-04-04 13:43 GMT   |   Update On 2020-04-04 13:43 GMT
வேலூர் மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் இரவு நேரத்திலும் இயங்கும் என்று அரசு அறிவித்தது. இதனால் சுடச்சுட இட்லியை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி சார்பில், அண்ணா சாலை, கஸ்பா, கொசப்பேட்டை, பாகாயம், விருபாட்சிபுரம், சத்துவாச்சாரி, அலமேலு மங்காபுரம், கலெக்டர் அலுவலகம் எதிரில், தாராபடவேடு, காட்பாடி காந்தி நகர், என, 10 இடங்களில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும் மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் இரவு நேரத்திலும் இயங்கும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களில் நேற்றுமுன்தினம் முதல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. 

இதனால் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் இட்லி வாங்கி சாப்பிடுகின்றனர். இங்கு பார்சலும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து இரவு நேரங்களில் சப்பாத்தி விற்பனை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News