செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் 970 டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

Published On 2020-04-03 09:58 GMT   |   Update On 2020-04-03 09:58 GMT
ராணிப்பேட்டையில் 970 மதுபாட்டில்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து ஈஸ்வரன், கோவிந்தசாமி மற்றும் போலீசார் ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒருவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அரி (38) என தெரியவந்தது.

விசாரணையில் இவருக்கு சொந்தமான வீட்டில் அரசு மதுபானம் 180 எம் எல் அளவு கொண்ட 970 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அரியை கைது செய்தனர்.
Tags:    

Similar News