செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் கைது

Published On 2020-03-26 13:53 IST   |   Update On 2020-03-26 13:53:00 IST
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்டர்காடு வடக்கு கிராமத்தில் கணேசன் மனைவி ஈஸ்வரி (வயது 55) என்ற பெண் டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டிற்கு அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்.

தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்ததில் ஈஸ்வரி வீட்டிற்கு அருகே 150 மிலி அளவு கொண்ட 271 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News