செய்திகள்
தஞ்சை-நாகையில் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ஊரடங்கு உத்தரவையடுத்து தஞ்சை, நாகையில் நேற்று 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.14 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாகை மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் விசைப்படகு, 12 ஆயிரம் பைபர்கள் படகுகளில் 80 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.3 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் நாகை துறைமுகம் மீன் விற்பனை நடை பெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 134 விசைப்படகுகளிலும், 4,500 நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 10 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாகை மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் விசைப்படகு, 12 ஆயிரம் பைபர்கள் படகுகளில் 80 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.3 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் நாகை துறைமுகம் மீன் விற்பனை நடை பெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 134 விசைப்படகுகளிலும், 4,500 நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 10 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.