செய்திகள்
கொரோனா வைரஸ் எதிரொலி- நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் மூடல்
நாகை மாவட்ட வேளாங்கண்ணியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகழ்பெற்ற நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டன.
நாகப்பட்டினம்:
கொரோனா நோய் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகையில் உலக புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவிற்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிவது வழக்கம், இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்துவரும் நாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி நாகூர் தர்கா இன்று முதல் வருகின்ற 31-ந் தேதி வரை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள், போன்றவைகள் நடக்கும் என்றும், காலை மற்றும் மாலை வேலைகளில் தலா ஒருமணிநேரம் தர்கா திறக்கப்பட்டு இருக்கும் என்றும் நாகூர் தர்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை நாகூர் தர்காவிற்கு வரவேண்டாம் என்றும் தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தர்கா மூடப்பட்டுள்ளதால், உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
அதேபோல் நாகை மாவட்டம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயமும் நேற்று முதல் மூடப்பட்டது. இதுதொடர்பாக பேராலய முகப்பில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் மறுஅறிவிப்பு வரும்வரை வேளாங்கண்ணி பேராலயத்தில் எவ்வித பொதுவழிபாடும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டதையடுத்து தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடபட்டன. கடற்கரைகள் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுனாமி, கஜாபுயல் போன்ற மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலங்களில் கூட வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படவில்லை.
பேராலயம் பூட்டப்பட்டாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் பேராலயத்துக்கு வெளியில் நின்று செய்துவிட்டு செல்கின்றனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் கொரோனா வைரஸ் எதிரொலியால் வருகிற 31-ந் தேதிவரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து படகுகளும் அந்தந்த மீன்பிடி துரைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகையில் உலக புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவிற்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிவது வழக்கம், இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்துவரும் நாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி நாகூர் தர்கா இன்று முதல் வருகின்ற 31-ந் தேதி வரை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள், போன்றவைகள் நடக்கும் என்றும், காலை மற்றும் மாலை வேலைகளில் தலா ஒருமணிநேரம் தர்கா திறக்கப்பட்டு இருக்கும் என்றும் நாகூர் தர்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை நாகூர் தர்காவிற்கு வரவேண்டாம் என்றும் தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தர்கா மூடப்பட்டுள்ளதால், உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
அதேபோல் நாகை மாவட்டம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயமும் நேற்று முதல் மூடப்பட்டது. இதுதொடர்பாக பேராலய முகப்பில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் மறுஅறிவிப்பு வரும்வரை வேளாங்கண்ணி பேராலயத்தில் எவ்வித பொதுவழிபாடும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டதையடுத்து தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடபட்டன. கடற்கரைகள் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுனாமி, கஜாபுயல் போன்ற மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலங்களில் கூட வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படவில்லை.
பேராலயம் பூட்டப்பட்டாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் பேராலயத்துக்கு வெளியில் நின்று செய்துவிட்டு செல்கின்றனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் கொரோனா வைரஸ் எதிரொலியால் வருகிற 31-ந் தேதிவரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து படகுகளும் அந்தந்த மீன்பிடி துரைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.