செய்திகள்
கைது

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

Published On 2020-03-21 15:02 IST   |   Update On 2020-03-21 15:02:00 IST
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர்ர் பூம்புகார் அருகேயுள்ள தருமகுளம், கீழேயூர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (வயது24) என்பதும் அவர் சீர்காழி தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்த 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Similar News