செய்திகள்
கைது

நாகை சிறுமியை மிரட்டி பலாத்காரம்- கூலி தொழிலாளி கைது

Published On 2020-03-17 15:37 IST   |   Update On 2020-03-17 15:37:00 IST
நாகை அருகே 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் தங்கி ஆடுகள் மேய்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்(46) கூலிதொழிலாளி.

இவர் அப்பகுதிக்கு அடிக்கடி செல்வார். இதில் அந்த சிறுமிக்கும், செந்திலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் செந்தில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி இரண்டரை மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அந்த சிறுமி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் செந்திலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News