செய்திகள்
விபத்து

பெருந்துறை அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2020-03-16 10:19 GMT   |   Update On 2020-03-16 10:19 GMT
பெருந்துறை அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55) விவசாயி. இவரும் இவரது தம்பி குமாரசாமி இருவரும் சம்பவதன்று ஓலப்பாளையம் பிரிவு பைபாஸ் ரோட்டில் உள்ள ஓரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றனர்.

டீ குடித்து கோவிந்தசாமி தனது சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டை கடந்துள்ளார். அப்போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News