செய்திகள்
தற்கொலை

சென்னிமலையில் வேனில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-03-12 10:15 GMT   |   Update On 2020-03-12 10:15 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வேனில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னிமலை:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியினை சேர்ந்தவர் ஆனந்த்பாபு, (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக சென்னிமலையில் தங்கி பவானியினை சேர்ந்த வெங்கடேஷ்வரன், என்பவரின் டூரிஸ்ட் வேனை ஓட்டி வந்தார்.

ஆனந்த்பாபு தினமும் சென்னிமலையில் இருந்து பனியன் தொழிலாளர்களை அழைந்து கொண்டு பெருமாநல்லூரில் உள்ள கம்பெனியில் விட்டு, விட்டு இரவு அழைந்து வரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஆனந்த்பாபு டூரிஸ்ட் வேனை சென்னிமலை பி.ஆர்.எஸ்., ரோடு, பெரியார்நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி அதில் படுத்து கொள்வார்.

நேற்று பங்கில் வேனில் படுத்து இருந்தவர் வெகு நேரமாகியும் வராத காரணத்தால் பங்கில் பணியாற்றியவர்கள் சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் கயிற்றில் வேனிலேயே தூக்குப்போட்டு இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனந்த்பாபு எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆனந்த்பாபுவிற்கு திருமணம் ஆகி வினோதா என்ற மனைவியும் மோகனா(3) என்ற குழந்தையும் உள்ளது.
Tags:    

Similar News