செய்திகள்
ஆதம்பாக்கத்தில் கொள்ளையர்கள் 3 பேர் கைது
ஆதம்பாக்கத்தில் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை தொடர்பாக ஐஸ்அவுசை சேர்ந்த தினேஷ், ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார், சாமுவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.