செய்திகள்
கைது

ஆதம்பாக்கத்தில் கொள்ளையர்கள் 3 பேர் கைது

Published On 2020-02-28 06:29 GMT   |   Update On 2020-02-28 06:29 GMT
ஆதம்பாக்கத்தில் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை தொடர்பாக ஐஸ்அவுசை சேர்ந்த தினேஷ், ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார், சாமுவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News