செய்திகள்
அந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்
அந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள குருநாதபுரத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவர் விறகு அடுப்பில் சமையல் செய்தபின், நெருப்பை அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
சில மணிநேரங்களுக்கு பின்பு, அப்பகுதியில் வீசிய லேசான காற்று தீப்பிழம்புகள் அவரது கூரை வீடு மீது விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.