செய்திகள்
கொலை

ஈரோட்டில் தறிப்பட்டறை தொழிலாளி படுகொலை

Published On 2020-02-26 09:22 GMT   |   Update On 2020-02-26 09:22 GMT
ஈரோட்டில் கிடா விருந்து தொடர்பாக தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு 16 அடி ரோடு ஐயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி உமா.

இந்நிலையில் துரையன் ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு துரையன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.

அப்போது கிடா விருந்து தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் சிலர் சேர்ந்து துரையனை தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் போட்டு உள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். இதையடுத்து நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். துரையனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா ஆய்வுகளை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News