செய்திகள்
கோப்பு படம்

ஈரோட்டில் இரும்பு வியாபாரி திடீர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்

Published On 2020-02-25 10:24 GMT   |   Update On 2020-02-25 10:24 GMT
ஈரோடு அருகே இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு வீரப்பன் சத்திரம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

மன வருத்ததில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News