செய்திகள்
சத்தி-கோபி ரோட்டில் அரியப்பம்பாளையத்தில் ரோட்டை கடந்து ஓடும் சிறுத்தை காட்சி

சத்தியமங்கலம்- கோபி ரோட்டில் ஊருக்குள் புகுந்து ரோட்டில் ஓடிய சிறுத்தையால் பீதி

Published On 2020-02-25 05:01 GMT   |   Update On 2020-02-25 05:01 GMT
சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் வனப்பகுதி எதுவும் கிடையாது. அப்படி இருந்தும் அந்த சிறுத்தை எப்படி ஊருக்குள் புகுந்தது? என அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன இதில் யானை மான் புலி சிறுத்தை என பல்வேறு விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மேட்டூர் பகுதியில் இன்று அதிகாலையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகேந்திரன் என்பவர் வரும் வழியில் ஒரு சிறுத்தை தென்னை மரத் தோட்டம் பகுதியில் ரோட்டை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறகு வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சிறுத்தை செல்வதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் உடனே தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர்.

சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட் தலைமையில் 10 பேர் கொண்ட குழு தென்னைமர தோட்டத்தை ஆய்வு செய்தனர்.

சிறுத்தை கால் தடங்களை ஆய்வு செய்து இது சிறுத்தையா? அல்லது புலியா என தெரியவில்லை என்று கூறினர் மேலும் இதை கண்காணிக்க தென்னை மரத் தோட்டம் மற்றும் வாழைத்தோட்டத்தில் 8 தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமராவின் மூலம் பதிவானால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் பொதுமக்களிடம் கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு சிறுத்தை சசத்தியமங்கலம் அருகே அரியப்பம் பாளையத்தில் சத்தி- கோபி மெயின் ரோடு வழியில் கடந்து செல்வதை அங்கிருந்த கடைகளில் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி இருந்தது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் வனப்பகுதி எதுவும் கிடையாது. அப்படி இருந்தும் அந்த சிறுத்தை எப்படி ஊருக்குள் புகுந்தது? என அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

கரும்பு காடு வயல் வெளியில் தப்பி தவறி வந்து ஊருக்குள் சிறுத்தை புகுந்திருக்க கூடும் என சத்தியமங்கலம் நகர மக்கள் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.

இதே போல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் சத்தி அடுத்த பாச குட்டை என்ற இடத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமான சோள தோட்டம் உள்ளது. தோட்டத்தில் இருந்த ஒரு கன்று குட்டியை சிறுத்தை ஒன்று இழுத்து காட்டு பகுதிக்குள் கொண்டு சென்று தின்று விட்டது.

இந்த சம்பவத்தை அறிந்து சத்தி நகர மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் சத்தியமங்கலம் ஊருக்குள் 2 சிறுத்தைகள் புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News