செய்திகள்
விபத்து

ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து கணவன், மனைவி படுகாயம்

Published On 2020-02-19 11:24 GMT   |   Update On 2020-02-19 11:24 GMT
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்:

பெங்களூர் மடவாளா பகுதியை சேர்ந்தவர் மயூர் (வயது 37). இவரது மனைவி மணி (30) மற்றும் 2 வயது மகளுடன் இன்று அதிகாலை காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை மயூர் ஓட்டினார். அவர்கள் வந்த கார் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மேம்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த மயூர் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News