செய்திகள்
பெண் பிணம்

கே.வி.குப்பம் அருகே கிணற்றில் பெண் பிணம்

Published On 2020-02-18 10:24 GMT   |   Update On 2020-02-18 10:24 GMT
கே.வி.குப்பம் அருகே கிணற்றில் பெண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மனைவி வசந்தா (வயது 55). கூலி தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவர் நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் நிலத்திற்கு வேலைக்கு சென்ற வசந்தாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாலையில் அதே நிலத்தில் உள்ள கிணற்றில் வசந்தா மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் உடனடியாக கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வசந்தாவின் உடலை மீட்டனர். கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தா கிணற்றில் தவறி விழுந்தாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News