செய்திகள்
கைது

வேலூர் சலவன்பேட்டை கட்டிட ஒப்பந்ததாரர் கொலையில் தொழிலாளி கைது

Published On 2020-02-17 11:06 GMT   |   Update On 2020-02-17 11:06 GMT
வேலூர் சலவன்பேட்டை கட்டிட ஒப்பந்ததாரர் கொலையில் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்:

வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் 2 வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற முருகவேல் (வயது45). கட்டிட ஒப்பந்ததாரர் மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த 7-ந்தேதி இரவு ஆனைகுளத்தம்மன் கோவிலுக்கு முருகவேல் சாமி கும்பிட சென்றார். பின்னர் ஒத்தவாடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் அங்கு வந்து முருகவேலை கத்தியால் குத்தினார். ரத்த காயத்துடன் தப்பி ஓடிய முருகவேல் நரசிங்க சாமி மடம் தெருவில் தரையில் விழுந்து இறந்தார்.

வேலூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முருகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜயகுமாரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

முருகவேல் வீட்டில் விஜயகுமார் அவரது மனைவி இருவரும் வேலை பார்த்தனர்.

அப்போது விஜயகுமாரை வேலையிலிருந்து முருகவேல் நீக்கியுள்ளார். அவரது மனைவிக்கு மட்டும் வேலை கொடுத்துள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் முருகவேலை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News