செய்திகள்
கோப்பு படம்

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ரூ.50 லட்சம் அபராதம் வசூல்

Published On 2020-02-15 13:33 GMT   |   Update On 2020-02-15 13:33 GMT
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 115 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 47,473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.50,41,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிபோதையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 115 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்டில் 4 பேருக்கு தண்டனையாக தலா ரூ.11,250 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News