செய்திகள்
கைது

சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாட்டம்- 4 பேர் சிக்கனர்

Published On 2020-02-13 13:30 GMT   |   Update On 2020-02-13 13:30 GMT
சத்தியமங்கலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.

ஈரோடு:

சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்தி- ஆலத்துக்கோம்பை பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சிலர் பணம் வைத்து சூதாட்டி கொண்டிருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த மணி(27), சத்தியமங்கலம், ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்த கோபால்(41), மாதன்(50), குழந்தைவேல்(37) என தெரிய வந்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் நால்வர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரிகளிடம் இருந்து பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News