செய்திகள்
கோப்பு படம்

தோ‌ஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி - வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2020-02-13 11:14 GMT   |   Update On 2020-02-13 11:14 GMT
ஈரோடு அருகே தோ‌ஷம் கழிப்பதாக கூறி வாலிபர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு ரோடு நாலாவது வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது53). இவரது மனைவி திலகவதி.

நேற்று லோகநாதன் பகலில் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் திலகவதியிடம் சென்று தோ‌ஷம் இருப்பதாக கூறினார். மேலும் தோ‌ஷம் கழிக்க ரூ.12 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் கெமிக்கல் கலந்த விபூதியை தண்ணீரில் கலந்து சிவப்பு நிறமாக மாறியதை காண்பித்து தோ‌ஷம் கழிந்து விட்டதாக நம்ப வைத்தார். இதையடுத்து அந்த வாலிபர் ரூ.6,000 வாங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பிய லோகநாதனிடம் நடந்த விவரம் குறித்து திலகவதி கூறினார். யோகநாதன் தனது மகனுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபர் சூரம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு, பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்கிற முன்னா(32) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். தோ‌ஷம் கழிப்பதாக கூறி வாலிபர் மோசடியில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News