செய்திகள்
எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2020-02-11 23:52 IST   |   Update On 2020-02-11 23:52:00 IST
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு:

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு நிறுவனத்தின் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எரிவாயு விற்பனை அதிகாரி சுகன்யா தலைமை தாங்கினார்.

ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு கொங்கு கலை அரங்கம் முன்பு தொடங்கிய ஊர்வலம் சம்பத்நகர் ரோடு வழியாக சென்று நசியனூர் ரோட்டில் முடிவடைந்தது.

முன்னதாக ஆர்.டி.ஓ. முருகேசன் முன்னிலையில் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கியாஸ் வினியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News