செய்திகள்
பவானிசாகர் அணை

நீர்வரத்து அதிகரிப்பு- 100 அடிக்கு மேல் நீடிக்கும் பவானிசாகர் அணை

Published On 2020-02-07 04:20 GMT   |   Update On 2020-02-07 04:20 GMT
பவானிசாகர் அணை தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருப்பது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7-ந்தேதி) காலை 9 மணி நிலவரப்படி 101.80 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 1378 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 1091 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று சற்று அதிகரித்துள்ளது.

ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி தண்ணீரும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு 800 கனஅடியும் காளிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News