செய்திகள்
சிறுத்தை நடமாட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்த காட்சி.

டி.என்.பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்- செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு

Published On 2020-02-06 17:24 GMT   |   Update On 2020-02-06 17:24 GMT
டி.என்.பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை நடமாட்டத்தை பார்வையிட அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம், ஏழூர், பெரியகொடிவேரி பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை பிடித்து வேட்டையாடி வருகிறது.

இதனையடுத்து டி.என்.பாளையம் வனத்துறை சார்பில் கேமரா பொறுத்தியும் கூண்டு வைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெரிய கொடிவேரி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன் பெரிய கொடிவேரி விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தையை பிடிக்க வைத்துள்ள கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளதா என்று பார்வையிட நேரில் ஆய்வு செய்ய வந்தார். சிறுத்தையின் நடமாட்டம் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளதா? எனவும் வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். 

Tags:    

Similar News