செய்திகள்
அரக்கோணம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
அரக்கோணம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சிறுணமல்லி மதுரா புதுமல்லி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி சுஜாதா (வயது22) இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிறுணமல்லி ஏரிக்கரை கங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் சுஜாதா சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெமிலி அடுத்த புன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சுஜாதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுஜாதா தற்கொலை குறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சுஜாதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளில் சுஜாதா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.
அரக்கோணம் அடுத்த சிறுணமல்லி மதுரா புதுமல்லி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி சுஜாதா (வயது22) இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிறுணமல்லி ஏரிக்கரை கங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் சுஜாதா சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெமிலி அடுத்த புன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சுஜாதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுஜாதா தற்கொலை குறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சுஜாதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளில் சுஜாதா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.