செய்திகள்
வழக்குகள்

ஈரோடு மாநகர் பகுதியில் ஜனவரி மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 2585 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-02-05 10:58 GMT   |   Update On 2020-02-05 10:58 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு, அபராதம் விதித்துள்ளனர்.

அதன்படி அதிவேகமாக சென்றதாக 34 வழக்குகளும், அதிக பாரம், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 80 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் சென்றதாக 969 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் 135 வழக்குகளும் என மொத்தம் வாகன விதிமுறைகளை மீறியதாக 2585 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News