செய்திகள்
விபத்து

நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து வேலூர் டாக்டர் பலி

Published On 2020-02-05 10:40 GMT   |   Update On 2020-02-05 10:40 GMT
நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:

டெல்லியை சேர்ந்தவர் டாக்டர் சுனில் அகர்வால் (வயது 59). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நலப்பிரிவு சர்ஜெரி தலைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று வேலூரில் இருந்து கோவைக்கு காரில் சென்றார். அவருடன் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் விமலின், டெக்னிசியன் வினோத் ஆகியோர் சென்றனர். காரை டாக்டர் விமலின் ஓட்டிச் சென்றார்.

நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுனில்அகர்வால் இறந்தார். இவரது மனைவி இந்திரா டாக்டராக உள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.

விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News