செய்திகள்
ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2020-01-19 18:27 GMT   |   Update On 2020-01-19 18:27 GMT
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊட்டி:

ஊட்டி நகர காவல்துறை மற்றும் தனியார் ஓட்டல் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மணிக்கூண்டு, ஏ.டி.சி. வழியாக குதிரை பந்தய மைதான நுழைவுவாயில் வரை சென்றது.

இதில் போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றனர். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வளைவில் திரும்பும் முன் சிக்னல் செய்ய வேண்டும், மிதமான வேகத்தில் வாகனங்களில் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News