செய்திகள்
நீர் முழ்கி பலி

வேதாரண்யம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-01-18 09:44 GMT   |   Update On 2020-01-18 09:44 GMT
வேதாரண்யம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா ஆதனூரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 38). இவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊரான ஆதனூருக்கு வந்தார். நேற்று அருகில் உள்ள சாம்பலம் ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் கடினல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்த வி‌ஷ மருந்தை எடுத்து குடித்துவிட்டார். சிகிச்சைக்காக வேதாரண்யம் நாகை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் கோடியக்காடு காளியாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (80). இவர் தனது மகன் புண்ணியமூர்த்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இவர் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். இந்நிலையில் கோடியக்கரை பம்ப்ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடுகிடப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை செய்ததில் மாயமான முதியவர் வீரபத்திரன் என அவரது உடையை வைத்து அடையாளம் கண்டனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News